Friday, February 4, 2011

நானும் நீங்களும்.....

நீங்கள் ஆக்கபூர்வமானவர்கள்....
நான் உணர்ச்சி மயமானவன்...
நீங்கள் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது
அவர்களால் வரும் ஆதாயத்தை....
நான் எதிர்ப்பார்பதோ
அவர்களின் அன்பை...
நீங்கள் காற்றை போல வீசுபவர்கள்....
எதையும் சட்டை செய்வதில்லை....
நான் காந்தம் போல ஒட்டி கொள்பவன்...
விட்டுவிட நினைத்ததில்லை......
நீங்கள் கடல் போல ஆர்பரிப்பவர்கள்
எல்லாவற்றையும் கரை தள்ளி விடுவீர்கள்.....
நான் நதி போல பாய்பவன்....
ஒரு பூவை கூட என்னோடு தூக்கி செல்வேன்.....
நான் நதி
கடலோடு சேர்வது தான் என் விதி.....

6 comments: