தை பொங்கலன்று முதல் முதலாக என் கருத்து பதிவை தொடங்கி இருக்கிறேன். பொங்கல் என்ற திருநாள் எனது சிறு வயதில் மிக மிக விரும்பிய ஒன்று. என்னை பொறுத்தவரை தீபாவளியை விட பொங்கல் திருநாள் காஞ்சீபுரத்தில் வெகு சிறப்பாக கொண்டாட படும் ஒன்று. இன்று மேற்கத்திய கலாச்சாரம் தாக்கத்தால் பொலிவு இழக்கும் திருநாட்களில் உழவர் திருநாள் முதலிடம் வகிக்கிறது என்றால் மிகை ஆகாது.. ஜனவரி ஒன்றை கொண்டாடும் நம் இளைஞர்களுக்கு பொங்கல் என்பது விடுமுறை, சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி என்ற கண்ணோட்டத்தில் சுருங்கி விட்டது... என் தலைமுறை ரசித்த அளவிற்கு கூட இந்த திருநாள் இல்லை...
போகி என்றால் நாங்கள் சிறுவர்கள் எல்லோரும் மூன்று நாட்கள் முன்பு ஒரு பழைய பாயில் கயிற்றை கட்டி, மேளம் தட்டி கொண்டு அனைவர் வீட்டுக்கும் சென்று பழைய பொருட்களை சேகரிப்போம்... அதற்கு இரவு காவல் பகல் காவல் என்று காவல் காத்து, தூங்காமல் போகி அன்று விடியற்காலையில் கொள்ளுத்துவோம்... இவற்றால் என்ன பயன் என கேட்கலாம்? குருடர்களுக்கு பார்வையின் அருமை தெரியாதது போல தான்... ECR ride, Multiplex theatre, Express avenue,PUB, I20 என சென்று விட்ட இளைஞர்களுக்கு இவை எல்லாம் புரியாது...
வீட்டில் மளிகை சாமான்கள் அரிசி பருப்பு போன்றவை வருடம் ஒரு முறை பொங்கலுக்கு தான் வாங்குவார்கள்... தை மாதம் அனைத்தும் விலை குறைவாக கிடைக்கும்... அதை சேமித்து வைக்க ஆளுயர பானைகள் வீட்டில் இருக்கும்.... அவைகளை துடைத்து பொட்டு வைத்து, விவசாயிகள் கொண்டு வரும் பிரமனை என்பதில் மேல் வைப்பார்கள்... பிரமனை என்பது வைக்கோலில் செய்யபடுவது... இன்று அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரம் வந்த பிறகு பிரமனை செய்யும் அளவுக்கு நீளமான வைக்கோல் கூட கிடைப்பதில்லை.... பிரமனையும் எவர் சில்வேரில் சரவணா ஸ்டோர்ஸ் கிடைக்கிறது... பானை பொங்கல் வழகொழிந்து குக்கர் பொங்கல் வந்து விட்டது...
இளைஞர்களிடம் பீப் என்பது சாதாரண உணவாகிவிட்ட பின் மாட்டு பொங்கல் என்பது மற்றவர்களை கிண்டல் செய்வதற்காக மட்டுமே பயன்படுகிறது... மச்சி நமக்கு எல்லாம் பொங்கல் டா அவனுக்கு மாட்டு பொங்கல் தானே டா என்பது சாதாரணம் ஆகிவிட்டது... பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பழக்கம் பொங்கலில் முக்கிய நிகழ்வு... எத்தனை பேருக்கு இது இன்று தெரியும் என்பதே மிக பெரிய கேள்வி....
valentines day, mothers day, fathers day, friendship day என்று கொண்டாடும் நம் மக்கள் நமது பழைய கலாசார பண்டிகைகள் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறார்கள்... வெளிநாட்டில் வசிக்கும் வடநாட்டவர்கள் சந்தித்து கொண்டால் ஹிந்தியில் பேசி கொள்கிறார்கள்... ஆனால் தமிழர்கள் ஆங்கிலத்தில் தான் ஆனந்தம் அடைகிறார்கள்... தமிழே தடுமாறி கொண்டு இருக்கும் போது தமிழர் திருநாள் கதி என்ன...
இன்று மக்கள் நோக்கியா, எச்போர்ட் கார்மெண்ட்ஸ் போன்றவற்றில் தான் வேலை செய்ய விரும்புகிறார்கள்... அதை தான் சமுதாயமும் மதிக்கிறது... விளை நிலங்களும் ரியல் ஈஸ்டடேக்கு பலி ஆகிவிடுகிறது.... விவசாயம் விவசாயி என்றால் முகம் சுளிக்கும் இந்த சமூகம், நாளை கையில் பணத்தை வைத்து கொண்டு அரிசிக்காக அல்லல் படும் நிலை வரத்தான் போகிறது.... விவசாயம் வளர எந்த அரசாங்கமும் திட்டங்கள் எதையும் வகுப்பதில்லை.... விவசாயத்திற்கு உலை வைத்துவிட்டு உழவர் திருநாள் கொண்டாடுவதில் என்ன பயன்? Happy Pongal என்று வாழ்த்து கூறி தமிழர் திருநாள் கொண்டாடுவதில் என்ன பயன்? ஊர் கூடி தெருவில் பானையில் பொங்கல் இடாமல், கடமைக்காக குக்கர் பொங்கல் வைத்து கொண்டாடுவதில் என்ன பயன்?
GOOD ARTICAL THX FOR REMIND MY CHILDHOOD LIFE, BEST OF LUCK TO YOU BLOG IN FUT
ReplyDeleteGood!, what u have said above is 100% correct
ReplyDeleteGreat..Congrats on writing ur first post..
ReplyDeleteபதிவர் சதா, மேலும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeletesadavoda thamizha pathu varushathukappuram padikirein....
ReplyDelete