2008 மே மாதம் மலேசியா வந்தேன்... இது தான் என் முதல் வெளிநாட்டு பயணம்... ஜெட் விமான பயணம் புதுமையாக இருந்தது... வீட்டு பறவையாக, செல்ல பிள்ளையாக, சொந்தம் பந்தம் என பழகிவிட்ட எனக்கு தொடக்கம் முதலே இந்த வாழ்க்கை நரகமாகவே இருந்தது... கிட்ட தட்ட மூன்று வருடங்கள் ஆகி விட்ட பின்னும் இன்னும் இந்த வாழ்கை ஒட்டவில்லை... சரியாக 21 மாதங்களில் 6 முறை இந்தியா சென்று வந்திருக்கிறேன்... வேலை நாட்களில் நேரம் சரியாக இருக்கும்... அதுவும் வீட்டுக்கு வந்து விட்டால் தலை வலியோ, உடல் வலியோ நாம்தான் காபி போட வேண்டும்.. வெளி உணவு சிறிது நாளைக்கு சுவைக்கும்.. அதன் பிறகு இந்த தென் இந்தியர்களின் சாபம் போலும் ... இட்லி தோசைக்கு மனம் ஏங்கும். துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், கூட்டல் பெருக்கல் என அம்மாவின் அருமை தெரிய ஆரம்பிக்கும்..
இதில் வீட்டை உடன் பகிர்வோர் வேறு... நீ அதிகம் சப்பாத்தி தின்றாய், ஹீட்டர் நிறுத்த மறந்து விட்டாய், நான் துவைக்கும் நாளில் நீ துவைக்காதே என்ற அர்ச்சனைகள்... அந்த கடையில் இட்லி கிடைக்கிறது... அந்த இடத்தில பொருட்கள் 50 சென் கம்மி... அங்கு சென்றால் krakjack பிஸ்கட் கிடைக்கும் என்ற அறிவுரைகள்.. தினம் தினம் இயந்திரம் போன்ற வாழ்க்கை... வீட்டிற்கு போன் செய்வது ஒரு திருநாள் போல தான்... காலிங் கார்ட் கிடைக்கும்... 15 டாலர்ஸ் க்கு 200 நிமிஷம்... அதிலிருந்து கால் செய்வதற்குள் உயிரே போய் விடும்... முதலில் அவர்கள் கஸ்டமர் கேர் க்கு போன் செய்ய வேண்டும்... அது நமக்கான தொகையை அறிவிக்கும் அதன் பிறகு உங்கள் எண்ணை அழுத்த சொல்லும்... எண் மனப்பாடமாக இருந்தால் தான் இந்த கட்டத்தை தாண்ட முடியும்.. இல்லை என்றால் பெயில்.... மீண்டும் எண்ணை நோண்டி மனப்பாடம் செய்து மீண்டும் முதலில் இருந்து வர வேண்டும்.... வெற்றி பெற்றால் நமக்கான நிமிடங்களை சொல்லும்... அதன் பிறகு இணைப்பு கொடுக்க படும்... சில சமயம் தவறான எண்ணுக்கு போய் விடும்... சில சமயம் நம் இந்திய மக்கள் எடுக்க மாட்டார்கள்... அப்படியே பேசினாலும் இரவு செய்யேன் ரொம்ப நேரம் பேசலாம் என்பார்கள்... சனி ஞாயிறில் கஸ்டமர் கேர் எண் கிடைப்பதே அரிதாகிவிடும்... இங்கும் உடன் வசிப்போர், தெரிந்த இந்தியர்களின் தலையீடு வேறு ... பவர் இந்தியா வா அது 200 நிமிஷம் தான் வரும் சார்... தாஜ்மஹால் கார்ட் 205 நிமிஷம் வருமே... எந்த கார்டில் செய்தாலும் என் அப்பா அம்மாவிற்கு சரியாக கேட்டதாக சரித்தரம் இல்லை... எதோ உத்தேசமாக தான் பதில் சொல்வார்கள்....
வேலை செய்யுமிடத்தில் எவ்ளோ தான் நேர்மையாக உண்மையாக உழைத்தாலும் நம்மை அந்நியர்களாகவே பார்ப்பர்.... பேருந்து ஓட்டுனர், வாயில்காவலன் கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.... இங்கு குடிமக்களாக இருக்கும் இந்தியர்களின் அதப்போ அந்நியர்களை விட அதிகம் இருக்கும்.... இதை எல்லாம் விட வங்கி, டிக்கெட் எடுத்தல், வருமான வரி எங்கு சென்றாலும் கடவு சீட்டை (passport) கேட்பார்கள்.... எதோ என் பிறப்பை சந்தேக்கிற மாதிரி உணர்வேன்....
எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தார் போல வரும் இந்திய பயணம்.... டிக்கெட் எடுத்த நாளில் இருந்து நாட்களை எண்ண தொடங்கி விடுவோம்... ஊரில் உள்ள எல்லோருக்கும் எதாவது ஒரு பொருள் தேடி வாங்குவோம்.... இந்தியா சென்ற உடன் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம்... பயணத்திற்கு முன் நாள் தூக்கம் வராது... இந்திய சென்ற இரண்டு நாள் எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும்.... அயல் நாட்டு வாழ்க்கையுடன் தொலைந்த இந்திய நண்பர்கள்... அவர்களது போகாத திருமணங்கள்... உறவினர்களின் மரணம்... குழந்தை பிறப்பு... என்னிடம் பட்டும் படாமல் அண்ணனிடம் அவர்கள் செய்யும் கலாட்டா.... வீட்டு குழந்தைகளின் அந்நியம்... நண்பர்களின் நேரமின்மை... இவை எல்லாம் மெதுவாக தாக்கும்.... ஒரு நண்பனை பார்த்து விட்டு வந்தால் மறு நண்பனின் கோபம் தாக்கும்.... எல்லோருக்கும் எதாவது வாங்கி சென்றாலும் அதிலே அதிருப்தி.... கிடைக்காதவர்களின் ஏக்கம்... ஆனால் இது வரை நான் வந்தது தெரிந்து என்னை வந்து பார்த்த நண்பர்கள் குறைவு... அவர்களை வந்து பார்க்கவில்லை என்று சொன்ன நண்பர்கள் அதிகம்... எனக்காக எதுவும் வாங்கி வரவில்லை என்போர் அதிகம்... நீ இல்லாத தீபாவளிக்கு நான் வாங்கி வைத்த உடை இது, பொங்கலுக்கு உனக்காக எடுத்த சட்டை என்று என் அம்மா கூட சொன்னது இல்லை.... வீட்டில் உள்ளவர்களே இப்படி என்றால் அடுத்தவர்களை என்ன சொல்ல??? வீட்டில் இருந்து மீண்டும் வெளிநாடு செல்லும் நாள் இருக்கிறதே கொடுமை? ஆயிரம் ஈட்டிகள் குத்துவது போலவும்... யாரோ தொடர்ந்து சுடுவது போலவும் இருக்கும்... நரகம் சாவு இவற்றை உயிரோடு அனுபவித்து விடுவோம்.... இங்கு வந்த சில நாட்கள் தூங்கி எழுந்தால் பக்கத்தில் அம்மா இருப்பது போலவும், இந்திய வீட்டில் இருப்பது போலவும் உணர்வோம்...
அம்மாவின் ஸ்பரிசம், அப்பாவின் அறிவுரை, அண்ணன் தங்கைகளின் பாசம், குழந்தைகளின் குதுகூலம், நண்பர்களின் கலாட்டா, உறவினர்களின் நெருக்கம், தெருவோர இட்லி, டீ கடை தேநீர், பண்டிகைகள், திருநாட்கள், வேகமான பைக் பயணம், மழைக்கான விடுமுறை, சகதியான சாலை, வியர்த்து விடும் வெயில், பேருந்துகளில் பயணிக்கும் சுகம், மஞ்சள் தடவிய மங்கள முகம், மதிக்கும் மாணவர்கள்... எச்சில் சாப்பாடு... 20 ரூபாய் கோழி பிரியாணி... கடக்கும் ரயில்... துரத்தும் தெரு நாய்... கடற்கரை சுண்டல்... மிளகாய் பொடி போட்ட மாங்காய்... இப்படி இழந்ததை யோசிக்கும் போது நாங்கள் இங்கு சம்பாதிப்பதும் குறைவு தான்.... NRI என்பது என்னை பொறுத்த வரை Non Residing Indians இல்லை... Non-stopingly Remembering India தான்.... தினம் எழுந்தவுடன் வயிறு நிரம்பி விடும் என ஆண்டவன் படைத்தது இருந்தால் என்னை போன்றோர் இது போல கவலை பட தேவை இருக்காது... அயல் தேசத்து வாழ்க்கை என்பது அடுத்தவர்களுக்கு வியப்பு... வாழ்பவர்களுக்கோ வெறுப்பு....
sariyaga sonnai nanba... athilum kadaisiyaga... nee mudhitha vidham arumai... sila nalla vishayangal ingu undu.. veetirku call seivathu sulabam.... aanal the most frustating... kovil illatha ooril kudiyaeraathae... enru periyavargal sonnadhu poal... kovil nagaramaam kanchi il irundhu... masoodhigalin mathiyil... kaduvalai thaedugiraen... thodarndhu.. eazhuthu... comment saeiya naan irukkiraen... nandri... nanbaendaaaa....
ReplyDeleteமனம் கனக்கிறது. இந்த வாழ்க்கையை விரும்புகிறவர்கள் மட்டுமே இதைத் தெரிவு செய்யவேண்டும்.
ReplyDelete