பழையன கழிதலும், புதியன புகுதலும் சாதாரணமான நிகழ்வு... ஆனால் எனக்கு முன்னது கடினம்... புதியன புகுந்தாலும் பழைய பொருட்களை விடுவது கடினம்... இப்படி தான் பல பொருட்களை வீட்டில் சேர்த்து வைத்து இருக்கிறேன்... ஒவ்வொரு முறையும் வீடு சுத்தம் செய்யும் போது அம்மாவிற்கும் எனக்கும் பிரச்சனை வரும்... 1994 இல் வாங்கிய போகி மேளம்... பள்ளியில் தோழி தந்த நாய் பொம்மை... 1990 முதல் இன்று வரை வந்த வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், பள்ளிகளில் இருந்து வரும் தேர்ச்சி அட்டைகள்,ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பழைய பேனாக்கள், தலையணை, வீட்டில் வாங்கிய முதல் கேமரா.... இப்படி எத்தனையோ.... அம்மாவின் கைகளில் இருந்து இன்றுவரை போராடி காப்பாற்றி வந்து இருக்கிறேன்... மலேசியா வந்த பிறகு அம்மாவே என் ஞாபகமாக அவற்றை தூக்கி போடாமல் காத்து வருகிறாள்.... இப்படி தான் 2001 இல் வாங்கிய என் கடவுச்சீட்டு (Passport), காலாவதியாகி புதியது வாங்கி விட்டேன்....
ஆனாலும் பழைய நினைவுகள்... நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது உடன் நண்பர்கள் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு விண்ணபித்தார்கள்... படிக்கும் காலத்தில் விண்ணப்பிக்கும் போது கல்லூரியின் சான்று வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்... நிஜமோ எவனோ ஒருவன் கிளப்பி விட்டதோ... என் தாத்தா போலவே இருக்கும் SO விடம் போய் எல்லோரும் நின்றோம்... படு கோபக்காரர் அவர்... உள்ளூர் ல ஓணான் புடிக்க முடியலையாம் இவனுங்க அசலூர் ல அரனை புடிக்க போறாங்க என திட்டி கொண்டே அந்த சான்றை கொடுத்தார்... நான் விண்ணப்பிக்கும் முன் என் அண்ணா இரண்டு மூன்று தடவை தபாலில் அனுப்பி, இது இல்லை அது இல்லை என்று திரும்பி வந்து விட்டது... அதனால் எனக்கு எவை எவை அவசியம் என்று தெரிந்து இருந்தது...மற்ற நண்பர்கள் தரகர் மூலம் சென்ற போதும், நான் எதோ ஒரு குருட்டு தைரியத்தில் எல்லாவற்றையும் தயார் செய்தேன்.... தபால் அலுவகத்தில் 20 ரூபாய் விண்ணப்பம், 300 ரூபாய் வரைவோலை... பதிவு தபால் செலவு 20 ரூபாய்.. இவ்வளவு தான்... மூன்று மாதம் கழிந்தது.... காவல் காரர் ஒருவர் வீடு தேடி வந்தார், அப்பா அக்கம் பக்கம் இரண்டு வீடுகளில் கடிதம் வாங்கி கொடுத்தார்... சொல்ல வேண்டுமா உடன் 50 ரூபாய்... மூன்றே நாட்களில் எனக்கு பிடித்த நீல நிற உறையில் கடவுச்சீட்டு வந்தது.... ஒரு நூறு முறை பிரித்தும் முகர்ந்தும் பார்த்தேன்.... காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து அர்ச்சனை... இன்னும் அந்த குங்கும சுவடு இருக்கிறது... எனக்கு கிடைத்த பிறகு என் அண்ணா, நண்பர்கள் சிலர் என் அறிவுரையின் பேரில் இதே முறையில் கடவுச்சீட்டு பெற்றார்கள்... நான் வாங்கிய சில நாட்களிலே கட்டணம் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது... இதெல்லாம் ஒரு பெருமையாக கருதிய காலங்கள் அவை.... அப்புறம் அது பீரோவிலே பல வருடம் இருந்தது... ஒரு முறை வோட்டு போட பந்தாவாக எடுத்து போனதோடு சரி....
2008 இல், மலேசியா பல்கலைகழக நேர்முக தேர்வின் போது தான் நீல உறையில் இருந்து மீண்டும் எடுத்தேன்.... அது நடந்து ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது... விசா போடா கடவுச்சீட்டை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்... எங்கும் காணவில்லை... அப்பொழுது வேளச்சேரியில் தனியாக இருந்தேன்... அப்பாவிடம் சொன்னால் அவர் வீணாக அலட்டி கொள்வார்... தங்கையிடம் மட்டும் சொல்லி வீட்டில் தேட சொன்னேன்... நானும் என் வீட்டில் தேடினேன்... அதற்குள் ஒரு வாரம் ஆகி விட்டது... மூன்று முறை தரகரிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.... வீட்டையே புரட்டி போட்ட பொழுது, முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின்பு இருந்தது... வேளச்சேரியில் மழையின் போது வீடெங்கும் தண்ணீர் ஊரும்... அதற்கு பயந்து கண்ணாடி பின் வைத்தது நினைவிற்கு வந்தது... சுவரிலும் நீர் ஊறி, நீல நிற உறையை பதம் பார்த்து விட்டது... அன்று தான் 7 வருடமாக இருந்த அதற்கு பிரியா விடை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது (பழையவற்றை காப்பதில் ஒரு பயன் பாருங்கள்). நீல உரையால் என் கடவுச்சீட்டு மிக மோசமான ஆபத்தில் இருந்து மீண்டது... ஆனால் மிகவும் அழுக்காக காட்சி அளித்தது....
இந்த 7 வருடத்தில் அது மட்டுமா மாறியது... காலத்திற்கு என் மேல் என்ன காழ்ப்புணர்ச்சியோ, நீல வாக்கில் வளர்க்காமல் அகல வாட்டில் வளர்த்து விட்டது... அந்த கடவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும், எனக்கும் சம்மந்தமே இல்லாமல் போய் விட்டது... அப்படியும் இந்த கடவுச்சீட்டை வைத்து கொண்டு 10 முறை மலேசியா சென்று வந்து விட்டேன்... ஒவ்வொரு முறையும் குடியேறல் அதிகாரிகள் கடவுச்சீட்டின் புகை படத்தை பார்த்த உடன், திறமையாக அம்மா பேரு சொல்லு.... அட்ரஸ் சொல்லு ன்னு எதாவது காமெடி செய்வார்கள்... என்னிடம் பான் கார்ட் இருக்கிறது, அடையாள அட்டை இருக்கிறது என்றால் முறைத்து விட்டு, கேட்டதற்கு பதில் என்பார்கள்... அம்மா பெயரையும், முகவரியும் சொன்னால் கையில் கிடைக்கும் பக்கத்தில் முத்திரையிட்டு அனுப்பி வைப்பார்கள்... அவ்ளோ தூரம் அதை வைத்து வந்தவன், அதிலிருக்கும் அம்மா பெயரையும், முகவரியையும் படிக்காமலா வந்து இருப்பான்... என்னவோ நம் குடியேறல் அதிகாரிகள் பற்றியே தனியாக ஒரு பதிவு செய்யலாம்.... ஒரு முறை விமானநிலையத்தில் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் கடவுச்சீட்டை கிழே போட்டு விட்டு சென்று விட்டேன்... யாரோ எடுத்து தந்தார்கள்... வீட்டுக்கு சென்றால் அப்பாவிடம் அதை எரிந்து விடுவேன்... மீண்டும் திரும்பி வரும் நாளில் தான் தொடுவேன்....
இப்படியாக என்னுடன் இருந்த A9554856 க்கு பத்து வயதாகி விட்டது.... நம் ஊரிலே அதை புதிப்பிக்க எடுத்த முயற்சிகள் என்னுடைய 20 நாள் விடுமுறையில் முடியவில்லை.... சாஸ்திரி பவனை மூன்று முறை சுற்றி வந்து தான் உள்ளே செல்ல முடியும்... அவ்ளோ கூட்டம்.... இங்கு வந்த உடனே அதற்கான முயற்சிகளை தொடங்கினேன்.... இந்திய தூதரகத்து சென்று அதற்கான விண்ணப்பம் அளித்தேன்... இந்திய தூதரகம் மலேசியாவில் ஒரு சின்ன இந்தியா... மலேசியாவில் காண முடியாத கூட்டம்... எரிந்து விழும் அதிகாரிகள்... அலறும் குழந்தைகள்.... சண்டையிடும் பெண்கள்... சாமர்த்தியமான ஆண்கள்... பழங்காலத்து சிரஞ்சீவி படம்... ஜோடி ராதா என்றால் பார்த்து கொள்ளுங்கள்.... பழுதான எண் அறிவிப்பு பலகை..... என ஒரு இந்தியா மாதரியே இருந்தது... அன்று விண்ணப்பம் உடன் என் பழைய கடவுச்சீட்டை பெற்று கொண்டார்கள்... மூன்று நாளில் புதிய கடவுச்சீட்டும், என் பழைய கடவுச்சீட்டை சிறிது வெட்டியும் தந்தார்கள்.... பழைய கடவுசீட்டையே பார்த்து கொண்டு இருந்தேன்.... அன்று இரவு அதை பற்றிய நினைவுகளை அசை போட்டேன்... விளைவு இந்த பதிவு...
கீட்ஸ் ஒரு கவிதையில், ஒரு அழகான பொருள் காலமெல்லாம் இன்பம் தரும் என்கிறார்....எனக்கோ ஒவ்வொரு பழைய பொருட்களின் பின் இருக்கும் எதோ சிறு நினைவுகள் காலமெல்லாம் இன்பம் தரும்.... பழையன கழிதல் மூளை ஆளுநர்களுக்கு (Mind rulers) பகட்டு.... பழையன கழிதல் இதய ஆளுநர்களுக்கு (Heart Rulers) பதிவு.....
ஆனாலும் பழைய நினைவுகள்... நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது உடன் நண்பர்கள் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு விண்ணபித்தார்கள்... படிக்கும் காலத்தில் விண்ணப்பிக்கும் போது கல்லூரியின் சான்று வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்... நிஜமோ எவனோ ஒருவன் கிளப்பி விட்டதோ... என் தாத்தா போலவே இருக்கும் SO விடம் போய் எல்லோரும் நின்றோம்... படு கோபக்காரர் அவர்... உள்ளூர் ல ஓணான் புடிக்க முடியலையாம் இவனுங்க அசலூர் ல அரனை புடிக்க போறாங்க என திட்டி கொண்டே அந்த சான்றை கொடுத்தார்... நான் விண்ணப்பிக்கும் முன் என் அண்ணா இரண்டு மூன்று தடவை தபாலில் அனுப்பி, இது இல்லை அது இல்லை என்று திரும்பி வந்து விட்டது... அதனால் எனக்கு எவை எவை அவசியம் என்று தெரிந்து இருந்தது...மற்ற நண்பர்கள் தரகர் மூலம் சென்ற போதும், நான் எதோ ஒரு குருட்டு தைரியத்தில் எல்லாவற்றையும் தயார் செய்தேன்.... தபால் அலுவகத்தில் 20 ரூபாய் விண்ணப்பம், 300 ரூபாய் வரைவோலை... பதிவு தபால் செலவு 20 ரூபாய்.. இவ்வளவு தான்... மூன்று மாதம் கழிந்தது.... காவல் காரர் ஒருவர் வீடு தேடி வந்தார், அப்பா அக்கம் பக்கம் இரண்டு வீடுகளில் கடிதம் வாங்கி கொடுத்தார்... சொல்ல வேண்டுமா உடன் 50 ரூபாய்... மூன்றே நாட்களில் எனக்கு பிடித்த நீல நிற உறையில் கடவுச்சீட்டு வந்தது.... ஒரு நூறு முறை பிரித்தும் முகர்ந்தும் பார்த்தேன்.... காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து அர்ச்சனை... இன்னும் அந்த குங்கும சுவடு இருக்கிறது... எனக்கு கிடைத்த பிறகு என் அண்ணா, நண்பர்கள் சிலர் என் அறிவுரையின் பேரில் இதே முறையில் கடவுச்சீட்டு பெற்றார்கள்... நான் வாங்கிய சில நாட்களிலே கட்டணம் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது... இதெல்லாம் ஒரு பெருமையாக கருதிய காலங்கள் அவை.... அப்புறம் அது பீரோவிலே பல வருடம் இருந்தது... ஒரு முறை வோட்டு போட பந்தாவாக எடுத்து போனதோடு சரி....
2008 இல், மலேசியா பல்கலைகழக நேர்முக தேர்வின் போது தான் நீல உறையில் இருந்து மீண்டும் எடுத்தேன்.... அது நடந்து ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது... விசா போடா கடவுச்சீட்டை கேட்ட பொழுது அதிர்ந்து போனேன்... எங்கும் காணவில்லை... அப்பொழுது வேளச்சேரியில் தனியாக இருந்தேன்... அப்பாவிடம் சொன்னால் அவர் வீணாக அலட்டி கொள்வார்... தங்கையிடம் மட்டும் சொல்லி வீட்டில் தேட சொன்னேன்... நானும் என் வீட்டில் தேடினேன்... அதற்குள் ஒரு வாரம் ஆகி விட்டது... மூன்று முறை தரகரிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.... வீட்டையே புரட்டி போட்ட பொழுது, முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின்பு இருந்தது... வேளச்சேரியில் மழையின் போது வீடெங்கும் தண்ணீர் ஊரும்... அதற்கு பயந்து கண்ணாடி பின் வைத்தது நினைவிற்கு வந்தது... சுவரிலும் நீர் ஊறி, நீல நிற உறையை பதம் பார்த்து விட்டது... அன்று தான் 7 வருடமாக இருந்த அதற்கு பிரியா விடை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது (பழையவற்றை காப்பதில் ஒரு பயன் பாருங்கள்). நீல உரையால் என் கடவுச்சீட்டு மிக மோசமான ஆபத்தில் இருந்து மீண்டது... ஆனால் மிகவும் அழுக்காக காட்சி அளித்தது....
இந்த 7 வருடத்தில் அது மட்டுமா மாறியது... காலத்திற்கு என் மேல் என்ன காழ்ப்புணர்ச்சியோ, நீல வாக்கில் வளர்க்காமல் அகல வாட்டில் வளர்த்து விட்டது... அந்த கடவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும், எனக்கும் சம்மந்தமே இல்லாமல் போய் விட்டது... அப்படியும் இந்த கடவுச்சீட்டை வைத்து கொண்டு 10 முறை மலேசியா சென்று வந்து விட்டேன்... ஒவ்வொரு முறையும் குடியேறல் அதிகாரிகள் கடவுச்சீட்டின் புகை படத்தை பார்த்த உடன், திறமையாக அம்மா பேரு சொல்லு.... அட்ரஸ் சொல்லு ன்னு எதாவது காமெடி செய்வார்கள்... என்னிடம் பான் கார்ட் இருக்கிறது, அடையாள அட்டை இருக்கிறது என்றால் முறைத்து விட்டு, கேட்டதற்கு பதில் என்பார்கள்... அம்மா பெயரையும், முகவரியும் சொன்னால் கையில் கிடைக்கும் பக்கத்தில் முத்திரையிட்டு அனுப்பி வைப்பார்கள்... அவ்ளோ தூரம் அதை வைத்து வந்தவன், அதிலிருக்கும் அம்மா பெயரையும், முகவரியையும் படிக்காமலா வந்து இருப்பான்... என்னவோ நம் குடியேறல் அதிகாரிகள் பற்றியே தனியாக ஒரு பதிவு செய்யலாம்.... ஒரு முறை விமானநிலையத்தில் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் கடவுச்சீட்டை கிழே போட்டு விட்டு சென்று விட்டேன்... யாரோ எடுத்து தந்தார்கள்... வீட்டுக்கு சென்றால் அப்பாவிடம் அதை எரிந்து விடுவேன்... மீண்டும் திரும்பி வரும் நாளில் தான் தொடுவேன்....
இப்படியாக என்னுடன் இருந்த A9554856 க்கு பத்து வயதாகி விட்டது.... நம் ஊரிலே அதை புதிப்பிக்க எடுத்த முயற்சிகள் என்னுடைய 20 நாள் விடுமுறையில் முடியவில்லை.... சாஸ்திரி பவனை மூன்று முறை சுற்றி வந்து தான் உள்ளே செல்ல முடியும்... அவ்ளோ கூட்டம்.... இங்கு வந்த உடனே அதற்கான முயற்சிகளை தொடங்கினேன்.... இந்திய தூதரகத்து சென்று அதற்கான விண்ணப்பம் அளித்தேன்... இந்திய தூதரகம் மலேசியாவில் ஒரு சின்ன இந்தியா... மலேசியாவில் காண முடியாத கூட்டம்... எரிந்து விழும் அதிகாரிகள்... அலறும் குழந்தைகள்.... சண்டையிடும் பெண்கள்... சாமர்த்தியமான ஆண்கள்... பழங்காலத்து சிரஞ்சீவி படம்... ஜோடி ராதா என்றால் பார்த்து கொள்ளுங்கள்.... பழுதான எண் அறிவிப்பு பலகை..... என ஒரு இந்தியா மாதரியே இருந்தது... அன்று விண்ணப்பம் உடன் என் பழைய கடவுச்சீட்டை பெற்று கொண்டார்கள்... மூன்று நாளில் புதிய கடவுச்சீட்டும், என் பழைய கடவுச்சீட்டை சிறிது வெட்டியும் தந்தார்கள்.... பழைய கடவுசீட்டையே பார்த்து கொண்டு இருந்தேன்.... அன்று இரவு அதை பற்றிய நினைவுகளை அசை போட்டேன்... விளைவு இந்த பதிவு...
கீட்ஸ் ஒரு கவிதையில், ஒரு அழகான பொருள் காலமெல்லாம் இன்பம் தரும் என்கிறார்....எனக்கோ ஒவ்வொரு பழைய பொருட்களின் பின் இருக்கும் எதோ சிறு நினைவுகள் காலமெல்லாம் இன்பம் தரும்.... பழையன கழிதல் மூளை ஆளுநர்களுக்கு (Mind rulers) பகட்டு.... பழையன கழிதல் இதய ஆளுநர்களுக்கு (Heart Rulers) பதிவு.....
super sir :)
ReplyDeleteoru kutti sujatha story padicha maathiri irunthathu....
ReplyDeleteமிக நீண்ட பதிவு என்றாலும் வாசித்தேன்
ReplyDeleteword verification எடுங்க சார்
நன்றி யாதவன்... கண்டிப்பாக செய்கிறேன்... தொடர்ந்து வாசித்து கருத்தை பதியவும்....
ReplyDelete