திருமண சந்தையில் அதிகார பூர்வமாக 2 வருடமாக இருக்கிறேன்... என் அண்ணனோ சுமார் 5 வருடம் சந்தையில் இருந்து ஒரு வழியாக திருமணம் முடிந்தது... காதல் திருமணம் கூட இன்றைய காலகட்டத்தில் மிக எளிதாக இருக்கிறது... கட்டுபாடுமிக்க பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து விட்டமையால் காதல் திருமணம் என்பதை நாங்கள் கனவிலும் சிந்திக்கவில்லை... அதற்காக எங்கள் சுதந்திரமும் பறிக்க படவில்லை... என்னுடைய தோழிகள் என்னை விட என் அம்மாவிற்கு நெருங்கியவர்கள்.... நான் வேலைக்காக எத்தனையோ நேர்காணல்களை சந்தித்து இருக்கிறேன்... ஆனால் இந்த பெண்ணை பெற்றவர்கள் கேட்கும் கேள்விகளை நான் எங்கும் எதிர் நோக்கியது இல்லை...
முதலில் சுய தொழில் என்றால் நீ ஆட்டத்திலே சேர முடியாது... முதல் வடிகட்டல் இங்கேயே தொடங்கி விடுகிறது... பொண்ணு படிக்கறா இப்போ பண்றதா இல்லையே என நழுவி விடுவார்கள்... ஆனால் அடுத்த மாதமே 2000 ரூபாய் வேலையில் இருக்கும் ஒருவனுக்கு தூக்கி கொடுப்பார்கள்.. மாப்பிள்ளை நோக்கியா ல வேலை பார்க்கறாரு.... பெரும்புதூர் பக்கத்துல மினரல் வாட்டர் கம்பெனி இருக்குல அதுல வேல... பார்த்தால் அவன் நோக்கியாவில் பெட்டி செய்வான்... பாட்டிலுக்கு சீல் அடித்து கொண்டு இருப்பான்....இப்படி நிராகரிக்கும் பெற்றோர் என்னவோ பெரிய வேலையில் இருக்கிறார்கள் என நினைத்தால் அது தவறு... அவர்கள் எதோ பால் வியாபாரம் பூ வியாபாரம் என தான் செய்து கொண்டு இருப்பார்கள்... ஆனால் வரும் மாப்பிள்ளை சுய தொழில் செய்ய கூடாது...
அடுத்து ஜாதகம்... அரச மரம் ஜோசியர் தான் நல்லா சொல்லுவார்... எங்க தாத்தா காலத்துல இருந்து குளத்தங்கர ஜோசியர் கிட்ட தான் பார்க்கிறோம் என கூறி ஜாதகம் வாங்குவார்கள்... என்னது பையன் மூல நட்சத்திரமா மாமியாரை மூலையில உட்கார வச்சுடுமே... ஆயில்யமா மாமியாருக்கு ஆகாது...பூராடம் போராடும்.... ஐயையோ அந்த பையனுக்கு ஏழுல ராகு... செவ்வாய் தோஷம், நாக தோஷம் ரெண்டும் இருக்கே... இந்த பையனை கட்டினா உங்க பொண்ணு கல்யாண மண்டபம் விட்டு விதவையா தான் வருவா... ஜாதகத்துல சந்தான ப்ராப்தி இல்லையே... இப்படியாக அரசமர , புளிய மர ஜோசியர்களால் வேப்பிலை அடித்து அனுப்ப படும் பெற்றோர் நாங்க பார்த்த இடத்துல ஜாதகம் நல்லா இல்ல என்று சொல்லிவிடுவார்கள்.... ஆனால் நம் ஜாதக ரகசியத்தை ஊர் முழுவதும் பரப்பியும் விடுவார்கள்...
அடுத்து வேலை... இன்றைய பெண் வீட்டு பெற்றோர்களுக்கு, எந்த வேலையும் கண்ணுக்கு தெரிவதில்லை.... சாப்ட்வேர் மாப்பிள்ளை தான் வேண்டும்.... என்னது ஆசிரியரா? இன்போசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் ல வேலைக்கு இருக்கற பையன் தான் வேணும்... இந்த பன்னாட்டு நிறுவன மோகம் என்பது இன்றைய பெற்றோர்களிடம் லாட்டரி, ரேஸ், குடி போல ஒரு போதையாகவே இருக்கிறது... விரிவுரையாளராக இருக்கும் பெண் கூட இன்று மென்பொருள் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் தான் இருக்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் மென்பொருள் தவிர மற்ற எல்லா வேலையும் மட்டமானது.... இதற்காக நாமெல்லாம் நாராயண மூர்த்தியாகவோ, பிரேம்ஜி மாதிரியோ ஒரு புதிய நிறுவனம் தொடங்கலாம் என்றால் நீங்கள் சுய தொழில் கிழே வந்து விடுவீர்கள் ஜாக்கிரதை... இன்னும் சிலருக்கு அரசாங்க வேலையில் போதை... திவாலி, மின் கம்பத்தில் fuse போடுகிறவர், மருந்து தெளிப்பவர் (நன்றி சுஜாதா) அவர்களுக்கு எல்லாம் பெண் கொடுப்பார்கள்... கொடுத்துவிட்டு கால் காசனாலும் கவர்மென்ட் காசு பாரு என வியாக்கியானம் பேசுவார்கள்...
இன்னும் பல இருக்கிறது... நாத்தனார் இல்லாத வீடா பாரு, மாமியார் மாமனார் வீட்ல இருக்க கூடாது, தனி குடித்தனம் இப்படியாக தொடங்கி, சொந்த வீடு இருக்கா? கார் இருக்கா?தோட்டம் தொறவு... நகை இப்படியாக கணக்கு போட்டு ஒரு நாள் பெண் பார்க்க வர சொல்வார்கள்.... பையன் விந்தி விந்தி நடக்கற மாதிரி தெரியுதே என்பார் பெண்ணின் சித்தப்பா... உடனே சித்தி மாடி படி ஏற சொல்லி பார்ப்போம் பொகிஷி தெரிஞ்சிடும்... ரகசியமாக விசாரித்தேன் பையனை அவன் வேல செய்யற எடுத்துல வெளி நாட்டுக்கே அனுப்ப மாட்டாங்களாம் என்பார் மாமா... மூக்கு சரியில்லை... போட்டோ ல கண்ணாடி போட்டு இல்லையே.... விவரம் சொல்கிறோம் என்பார்கள்... சில நாட்களில் வேலை செய்யும் இடத்தில் வந்து நிற்பார்கள்.... ஆஹா என்ன ஒரு ஆராய்ச்சி? இன்றைய பெண் வீட்டுகாரர்கள் எந்த IIM இல் மேலாண்மை பட்டம் பெற்றார்களோ? இவர்கள் வைக்கும் பரீட்சைகள் பன்னாட்டு நிறுவன நேர்காணலை விட கடினமானது....இன்றெல்லாம் ஆயிரம் உண்மை சொல்லி கூட ஒரு திருமணத்தை நடத்த முடிவதில்லை....
இப்படி தேறும் மாப்பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளோ அதிகமாக இருக்கிறது... அதன் பிறகு வரதட்சனை கேட்கிறார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.... விவாகரத்து என்பது சாதாரணம் ஆகிவிட்டது.... பெண்ணின் பெற்றோர்களே இதை ஆதரிக்கவும் தொடங்கி விட்டார்கள்... அவர்களது பெண்ணின் வாழ்கைகாக அவர்கள் இதையெல்லாம் செய்வது நியாயம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால்....இதற்காக நான் ஆண் வீட்டு பெற்றோர்களை ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்...
இன்று நல்ல பையன், குணவான், நல்ல குடும்பம் என்பதெல்லாம் மறைந்து விட்டது... என்ன வேலை எவ்வளவு சாம்பாதியம் என்று தான் பார்கிறார்கள்... இரு வீட்டாரும் உங்களது எதிர்ப்பார்ப்புகளை குறையுங்கள்... விட்டு கொடுங்கள்... எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதாகவே இருக்க விடுங்கள்... சொத்துகளாலும், சொகுசுகளாலும் நிச்சயிக்க படுவதை நிறுத்துங்கள்.....
முதலில் சுய தொழில் என்றால் நீ ஆட்டத்திலே சேர முடியாது... முதல் வடிகட்டல் இங்கேயே தொடங்கி விடுகிறது... பொண்ணு படிக்கறா இப்போ பண்றதா இல்லையே என நழுவி விடுவார்கள்... ஆனால் அடுத்த மாதமே 2000 ரூபாய் வேலையில் இருக்கும் ஒருவனுக்கு தூக்கி கொடுப்பார்கள்.. மாப்பிள்ளை நோக்கியா ல வேலை பார்க்கறாரு.... பெரும்புதூர் பக்கத்துல மினரல் வாட்டர் கம்பெனி இருக்குல அதுல வேல... பார்த்தால் அவன் நோக்கியாவில் பெட்டி செய்வான்... பாட்டிலுக்கு சீல் அடித்து கொண்டு இருப்பான்....இப்படி நிராகரிக்கும் பெற்றோர் என்னவோ பெரிய வேலையில் இருக்கிறார்கள் என நினைத்தால் அது தவறு... அவர்கள் எதோ பால் வியாபாரம் பூ வியாபாரம் என தான் செய்து கொண்டு இருப்பார்கள்... ஆனால் வரும் மாப்பிள்ளை சுய தொழில் செய்ய கூடாது...
அடுத்து ஜாதகம்... அரச மரம் ஜோசியர் தான் நல்லா சொல்லுவார்... எங்க தாத்தா காலத்துல இருந்து குளத்தங்கர ஜோசியர் கிட்ட தான் பார்க்கிறோம் என கூறி ஜாதகம் வாங்குவார்கள்... என்னது பையன் மூல நட்சத்திரமா மாமியாரை மூலையில உட்கார வச்சுடுமே... ஆயில்யமா மாமியாருக்கு ஆகாது...பூராடம் போராடும்.... ஐயையோ அந்த பையனுக்கு ஏழுல ராகு... செவ்வாய் தோஷம், நாக தோஷம் ரெண்டும் இருக்கே... இந்த பையனை கட்டினா உங்க பொண்ணு கல்யாண மண்டபம் விட்டு விதவையா தான் வருவா... ஜாதகத்துல சந்தான ப்ராப்தி இல்லையே... இப்படியாக அரசமர , புளிய மர ஜோசியர்களால் வேப்பிலை அடித்து அனுப்ப படும் பெற்றோர் நாங்க பார்த்த இடத்துல ஜாதகம் நல்லா இல்ல என்று சொல்லிவிடுவார்கள்.... ஆனால் நம் ஜாதக ரகசியத்தை ஊர் முழுவதும் பரப்பியும் விடுவார்கள்...
அடுத்து வேலை... இன்றைய பெண் வீட்டு பெற்றோர்களுக்கு, எந்த வேலையும் கண்ணுக்கு தெரிவதில்லை.... சாப்ட்வேர் மாப்பிள்ளை தான் வேண்டும்.... என்னது ஆசிரியரா? இன்போசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் ல வேலைக்கு இருக்கற பையன் தான் வேணும்... இந்த பன்னாட்டு நிறுவன மோகம் என்பது இன்றைய பெற்றோர்களிடம் லாட்டரி, ரேஸ், குடி போல ஒரு போதையாகவே இருக்கிறது... விரிவுரையாளராக இருக்கும் பெண் கூட இன்று மென்பொருள் மாப்பிள்ளை தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் தான் இருக்கிறார்கள்... அவர்களுக்கு எல்லாம் மென்பொருள் தவிர மற்ற எல்லா வேலையும் மட்டமானது.... இதற்காக நாமெல்லாம் நாராயண மூர்த்தியாகவோ, பிரேம்ஜி மாதிரியோ ஒரு புதிய நிறுவனம் தொடங்கலாம் என்றால் நீங்கள் சுய தொழில் கிழே வந்து விடுவீர்கள் ஜாக்கிரதை... இன்னும் சிலருக்கு அரசாங்க வேலையில் போதை... திவாலி, மின் கம்பத்தில் fuse போடுகிறவர், மருந்து தெளிப்பவர் (நன்றி சுஜாதா) அவர்களுக்கு எல்லாம் பெண் கொடுப்பார்கள்... கொடுத்துவிட்டு கால் காசனாலும் கவர்மென்ட் காசு பாரு என வியாக்கியானம் பேசுவார்கள்...
இன்னும் பல இருக்கிறது... நாத்தனார் இல்லாத வீடா பாரு, மாமியார் மாமனார் வீட்ல இருக்க கூடாது, தனி குடித்தனம் இப்படியாக தொடங்கி, சொந்த வீடு இருக்கா? கார் இருக்கா?தோட்டம் தொறவு... நகை இப்படியாக கணக்கு போட்டு ஒரு நாள் பெண் பார்க்க வர சொல்வார்கள்.... பையன் விந்தி விந்தி நடக்கற மாதிரி தெரியுதே என்பார் பெண்ணின் சித்தப்பா... உடனே சித்தி மாடி படி ஏற சொல்லி பார்ப்போம் பொகிஷி தெரிஞ்சிடும்... ரகசியமாக விசாரித்தேன் பையனை அவன் வேல செய்யற எடுத்துல வெளி நாட்டுக்கே அனுப்ப மாட்டாங்களாம் என்பார் மாமா... மூக்கு சரியில்லை... போட்டோ ல கண்ணாடி போட்டு இல்லையே.... விவரம் சொல்கிறோம் என்பார்கள்... சில நாட்களில் வேலை செய்யும் இடத்தில் வந்து நிற்பார்கள்.... ஆஹா என்ன ஒரு ஆராய்ச்சி? இன்றைய பெண் வீட்டுகாரர்கள் எந்த IIM இல் மேலாண்மை பட்டம் பெற்றார்களோ? இவர்கள் வைக்கும் பரீட்சைகள் பன்னாட்டு நிறுவன நேர்காணலை விட கடினமானது....இன்றெல்லாம் ஆயிரம் உண்மை சொல்லி கூட ஒரு திருமணத்தை நடத்த முடிவதில்லை....
இப்படி தேறும் மாப்பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளோ அதிகமாக இருக்கிறது... அதன் பிறகு வரதட்சனை கேட்கிறார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.... விவாகரத்து என்பது சாதாரணம் ஆகிவிட்டது.... பெண்ணின் பெற்றோர்களே இதை ஆதரிக்கவும் தொடங்கி விட்டார்கள்... அவர்களது பெண்ணின் வாழ்கைகாக அவர்கள் இதையெல்லாம் செய்வது நியாயம் தான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால்....இதற்காக நான் ஆண் வீட்டு பெற்றோர்களை ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்...
இன்று நல்ல பையன், குணவான், நல்ல குடும்பம் என்பதெல்லாம் மறைந்து விட்டது... என்ன வேலை எவ்வளவு சாம்பாதியம் என்று தான் பார்கிறார்கள்... இரு வீட்டாரும் உங்களது எதிர்ப்பார்ப்புகளை குறையுங்கள்... விட்டு கொடுங்கள்... எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதாகவே இருக்க விடுங்கள்... சொத்துகளாலும், சொகுசுகளாலும் நிச்சயிக்க படுவதை நிறுத்துங்கள்.....