Saturday, February 26, 2011

நானும் சென்னையும்.....

எனக்கும் சென்னைக்கும் உண்டான பந்தம் அது மதரசாக இருந்த பொழுதே தொடங்கி விட்டது ..... 80 களில் என் அப்பா அடிக்கடி சென்னை செல்வார்.... நாங்கள் மூவரும் தூங்கிய பிறகு தான் வருவார்... ஆவின் பால்கோவா, அர்ச்சனா ஸ்வீட்சில் இருந்து பானையில் ரசமலாய், அண்ணா நகர் லாலா கடை ஜிலேபி ஆகியவை வாங்கி வருவார்.... அம்மா எழுப்பி தருவார்கள்.... மெட்ராஸ் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இது தான்.... சிறுவயதில் மெட்ராஸ் செல்வது என்றால் ஒரு தனி குதுகூலம் தான்... மெரினா கடற்கரை, LIC கட்டிடம், ஜெயப்ரதா திரையரங்கம், வேலு அசைவ உணவகம் இப்படியாக என்னை கவர்ந்த விஷயங்கள் பல.... ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது வைகைகி காம்ப்ளெக்ஸ் இல் 500 ரூபாய்க்கு ஒரு water proof பேண்ட் வாங்கி தந்தார்... அந்த காலத்தில் என் நண்பர்கள் மத்தியில் அது வெகு பிரபலம்... 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது சூளைமேட்டில் இருந்த என் அக்கா வீட்டிற்கு தனியாக செல்ல தொடங்கினேன்... அப்பொழுதான் சென்னையை meter gadge train இல் ஆராயும் வாய்ப்பு கிடைத்தது...
தேவி திரையரங்கத்தில் Speed படம், பெசன்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவில், மயிலாப்பூர், தி நகர், பூங்கா நகர் evening bazaar என பல இடங்கள் தனியாகவும் அக்காவுடனும் சுற்றி இருக்கிறேன்... கல்லூரி சேர்ந்த பிறகு கட் அடித்து சென்னை செல்வது வாடிக்கையானது.... எத்தனையோ படங்கள், ஸ்பென்சர் பிளாசா என பல இடங்கள்.... ஆனால் சென்னைக்கும் எனக்குமான பந்தம் தங்கவேலு கல்லூரி சேர்ந்து நண்பர்களுடன் வேளச்சேரியில் வீடு எடுத்தேன்.... அது வரையில் சென்னை என்ற மங்கையை பகலிலே பார்த்த எனக்கு அவளை இரவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..... அதற்குள் சென்னையில் பல மாற்றங்கள்... மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் என மாறி விட்டது.... இரவில் அண்ணா சாலையில் இரு சக்கர வாகன பயணம்... பெசன்ட் நகர் பீச்சில் இரவு 12 மணி வரை அரட்டை, brilliant tutorial எதிரில் இருக்கும் கை ஏந்தி பவன் தொடங்கி, பீச்சில் மீன் கடை, பாஷா தெரு டீ கடை, அஞ்சப்பர், காரைக்குடி செட்டிநாடு, பொன்னுசாமி , குமரகம், வாங்க்ஸ் கிச்சன், பெலிட்டா நாசி கண்டார், ஓபல் இன், என நான் போகாத உணவகங்களே இல்லை... சத்யம், அபிராமி, சிட்டி சென்டர் என திரையரங்குகள்.... வாரந்திர சென்னை டு காஞ்சிபுரம் பைக் பயணம் என என் வாழ்கையில் சென்னை ஒரு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது... இப்படி சென்னையில் இரவு பறவையாக சுற்றி கொண்டிருந்த நான் ஒரு இரவில் மலேசியா செல்லும் விமானத்தில் சென்னையை மேலே இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.... அம்மா அப்பா தங்கை நண்பர்கள் என எல்லோருடைய அழுகையை கடந்து தைரியமாக வந்த எனக்கு சென்னையின் butterfly view கதற வைத்து விட்டது....ஒவ்வொரு தடவையும் மலேசியாவில் இருந்து வரும் போது விமானம் சென்னையில் நுழையும் பொழுது கண்கள் தானாக கலங்கும்.... சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் தமிழை கேட்டால் தான் உயிரே வரும்....
சென்னையை பற்றி பல பேர்கள் தங்கள் வெறுப்பை என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.... தமிழ் படங்களில் சென்னையை ஒரு வாழ தகுதியற்ற இடமாய் சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள்.... ஆனால் சென்னையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால்... நம் கையில் பணம் இருந்தாலோ, பணமே இல்லை என்றாலும் சென்னையில் ரசிக்க, அனுபவிக்க இடங்கள் இருக்கின்றன... நான் பல நாட்கள் கையில் பத்து ரூபாய் வைத்து கொண்டு பீச்சில் உட்கார்ந்து அலைகளையும் நிலவையும் மட்டும் ரசித்து பஸ்சில் பாதியும் மீதி தூரம் நடந்தும் வீடு வந்து சேர்ந்து இருக்கிறேன்....
சென்னை புரிந்தவர்களுக்கு பூங்காவனம் புரியாதவர்களுக்கு பாலைவனம்....

Friday, February 4, 2011

நானும் நீங்களும்.....

நீங்கள் ஆக்கபூர்வமானவர்கள்....
நான் உணர்ச்சி மயமானவன்...
நீங்கள் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது
அவர்களால் வரும் ஆதாயத்தை....
நான் எதிர்ப்பார்பதோ
அவர்களின் அன்பை...
நீங்கள் காற்றை போல வீசுபவர்கள்....
எதையும் சட்டை செய்வதில்லை....
நான் காந்தம் போல ஒட்டி கொள்பவன்...
விட்டுவிட நினைத்ததில்லை......
நீங்கள் கடல் போல ஆர்பரிப்பவர்கள்
எல்லாவற்றையும் கரை தள்ளி விடுவீர்கள்.....
நான் நதி போல பாய்பவன்....
ஒரு பூவை கூட என்னோடு தூக்கி செல்வேன்.....
நான் நதி
கடலோடு சேர்வது தான் என் விதி.....