Monday, December 10, 2012

இந்த காதல் தான்....


(கற்பனையில் தோன்றிய ஒரு காதல் கவிதை....தலைவன் பார்வையில் ....)

ஆயிரம் குழந்தைகளை
ஆராய்ந்தால்
அதிகபட்சம்
ஆயிரம்  குழந்தைதனத்தை
அறியலாம் ...
என் காதலி ஒருவளிடம்
எட்டாயிரம் குழந்தைதனத்தை
எளிதில்
எண்ணி விடலாம்...
சுருக்கமாக சொன்னால்
உருவத்தில்
குமரி போன்ற குழந்தை
உணர்வுகளில்
குழந்தை போன்ற குமரி....
கள்ளமில்லா சிரிப்பு....
கருணையான பார்வை....
ஈரமான இதயம்....
தவறாக தொட்டலோ
பேசினாலோ கூட
பகுத்தறியாத பாவை.....
சண்டை என்று வந்தாலோ
சரிசமமாய்
சாமாளிக்கும் பாதகி....
சிரித்து பேசுவாள்
சிறிய விஷயத்திற்கு
சீறுவாள்....
கத்திகொண்டே பேசுவாள்
பேசிக்கொண்டே கதறுவாள்...
கன்னட அணைகள் திறப்பதுதில்லை
கன்னியின் கண்ணனை
திறந்தாலோ நிற்பதில்லை...
இனி பேசுவது
கடினம் ...
சாமாளிப்பது
அரிது....
துண்டித்து விடுவேன்
தொலைபேசியை....
கோபம் வரும்..
குமுறல் எழும்....
ஆண்மை ஆர்ப்பரிக்கும்
காதல் சாந்தபடுத்தும்....
மீண்டும் நானே அழைப்பேன்
எதுவும் நடக்காதது போல
எதார்த்தமாய் பேசுவேன்...
குழந்தையாய் சிரிப்பாள்...
காது வலிக்க மீண்டும்
தொடங்கிவிடுவாள்....
அடம் பிடிக்கும் குழந்தையை
அடித்த பிறகு
அணைக்கும்
அன்னை
தோற்றா போகிறாள்???
இது தோல்வி என்றால்
என் குழந்தைக்காக
தினம் தினம்
தோற்க நான் தயார்....
 எதுவுமே நடக்காதது போல
பேசினாலும்...
மறுகணமே துயரம்
மறந்து சிரிக்கும்
மனது....
இந்த காதல் தான்
எனக்கு இன்னும் உயிரூட்டுகிறது.....
சூரியனால்
சிரிக்கும்   தாமரை போல
தினம் தினம்
உன்னாலே
உயிர்பிக்கப்படுகிறேன் .....

(தலைவியின் பார்வையில்)

இருவர் மீதும் தவறு
இருக்காது
இருந்தாலும் எப்படியோ
இடையில் வந்துவிடுகிறது
வாக்குவாதம்...
என் வார்த்தைகள் மிகும் பொழுது
உன் மௌனம்
எனது உச்ச சுருதியில்
உனது அடக்கம்....
இந்த
இடைவிட பேச்சு
எப்பொழுதும்
என்
அழுகையில் முடியும்
அழுகைக்கு அனுதாபம்
என்றுமே
எனக்கு கிடைத்ததில்லை
மாறாக கிடைப்பது
தொலைபேசி துண்டிப்பு...
வெறுமையாய் இருக்கும்
தனிமை கொல்லும்...
தவறுகள் புரியும்....
எதிர்பாராமல் வரும் உன் அழைப்பு...
எதுவுமே நடக்காதது போல மீண்டும்
எதார்த்தமாய் பேசுவாய்
இந்த காதல் தான்
இன்னும் எனக்கு உயிரூட்டுகிறது...
காந்தத்தால்
கவரப்படும்
இரும்பு துகள் போல
என் ஒவ்வொரு
அணுவும்
உன்பால் கவரப்படுகிறது ......

No comments:

Post a Comment